Header Ads



சரத் வீரசேகரவை வைத்து உன்னைத் தூக்குவேன்


'உன்னைப் பற்றி தவறாக சரத் வீரசேகர எம்.பியிடம் கூறி உன்னைத் தூக்குவேன், இல்லாமல் பண்ணி விடுவேன்' என வவுனியாவில் இருந்து யாழ்ப்பாண இளைஞன் ஒருவருக்கு தொலைபேசி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.


பசார் வீதி, வவுனியாவை சேர்ந்த ஒருவரால் தனக்கு கொலை அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று (25.07.2023) யாழ்.பொலிஸ் நிலையத்தில் 2023/07/22 ஆம் திகதி CIB 2 212/296 எனும் இலக்கத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் உள்ள குறித்த நபரின் உறவினருக்கு 2 இலட்சம் ரூபாய் கடனாகக் கொடுத்த நிலையில் அதனைத் தருமாறு பலமுறை கேட்ட நிலையில் வழங்காத நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தேன் என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.