Header Ads



நடத்த விட மாட்டார் ரணில்


 ஜனாதிபதி தேர்தலை தவிர வேறு எந்த தேர்தலையும், ரணில் நடத்த விட மாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


இன்றையதினம் (26.07.2023) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,


ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் தேர்தல் நடத்தும்படி கோரினர்.


"13ஐ முழுமையாக வைத்து தேர்தல் நடத்தினால், தெற்கின் ஏழு மாகாணங்களிலும், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை ரணில் வழங்கி விட்டார் என்பதையே அடிப்படையாக கொண்டு தென்னிலங்கையில் இனவாத பிரசாரம் நடக்கும்.ஆகவே தேர்தலை நடத்த முடியாது" என ஜனாதிபதி ரணில் திட்டவட்டமாக கூறி விட்டார்.


ஆகவே, எக்காரணம் கொண்டும், ஜனாதிபதி தேர்தலை தவிர வேறு எந்த தேர்தலையும், ரணில் நடத்த விட மாட்டார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இதுதான் அரசியல் யதார்த்தம்.


ஆகவே தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக நான், இன்று கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ரவுப் ஹக்கீமும் கருத்து தெரிவிக்கவில்லை.


புதிய ஜனாதிபதி, அதையடுத்து புதிய நாடாளுமன்றம், என்ற நிலைமாறல்களுக்கு பிறகுதான் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் எந்த மாற்றமும் ஏற்பட முடியும் என தெரிவித்துள்ளார்.


மேலும் 13ம் திருத்தத்தை முழுமையாக பொலிஸ் அதிகாரத்துடன் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாகல காரியவாசம், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, கெவிது குமாரதுங்க, சரத் வீரசேகர ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.