Header Ads



நாட்டில் சுகாதாரத்துறை வீழ்ச்சி, எதிர்வரும் நாட்களில் நெருக்கடி மேலும் மோசமாகும்


நாட்டில் சுகாதாரத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், நாட்டிலிருந்து அகற்றப்பட்ட மூன்று தொற்று நோய்கள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்துள்ளார்.


உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்தபடி நாட்டில் இருந்து அகற்றப்பட்ட ஆறு தொற்று நோய்களில் மலேரியா, யானைக்கால் நோய் மற்றும் தட்டம்மை ஆகியவை மீண்டும் வந்துள்ளன என்றும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


சுகாதாரத் துறையின் நெருக்கடி எதிர்வரும் நாட்களில் மேலும் மோசமாகும் எனவும் தெரிவித்தார்.


“பொருளாதார மீட்சியில் மட்டும் நாம் கவனம் செலுத்த முடியாது. சுகாதாரத் துறை மக்களின் வாழ்க்கையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை வீழ்ச்சியடைந்தால், ஓரிரு நாட்களில் உடனடித் தீர்வுகளைக் கொடுத்து அதை மீட்டெடுக்க முடியாது. உடனடியாக தீவிர முடிவுகளை எடுக்க வேண்டும்,” என்றார்.

No comments

Powered by Blogger.