Header Ads



நாளைமுதல் வழமைப்போன்று திறக்கப்படும்


ஐந்து நாள் விடுமுறைக்கு பிறகு வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் நாளை (04.07.2023) வழமைப்போன்று திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக கடந்த வியாழன் (29.07.2023) முதல் இன்று (03.07.2023) வரை வங்கிகள் மூடப்பட்டிருந்தன.


வங்கிகள் மூடப்பட்டதுடன் கொழும்பு பங்குச் சந்தையும் ஐந்து நாட்களுக்கு மூடப்பட்டிருந்தது.


இந்நிலையில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளும் நாளை முதல் வழமைப்போன்று திறக்கப்படும்.


No comments

Powered by Blogger.