Header Ads



முத்துராஜாவின் நிலையினால் தாய்லாந்து மேற்கொண்டுள்ள தீர்மானம்


இலங்கைக்கு தாய்லாந்தால் வழங்கப்பட்ட எஞ்சிய இரண்டு யானைகள் குறித்து தாய்லாந்து மக்கள் அக்கறை கொண்டால், அவற்றை மீட்பதற்கு தமது அமைச்சு வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து செயற்படும் என தாய்லாந்து சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இலங்கையின் கவனக்குறைவு காரணமாக தாய்லாந்திற்கு கொண்டு வரப்பட்ட முத்துராஜா யானை தற்போது அந்நாட்டில் வைத்திய சிகிச்சை பெற்று வருகின்றதுடன், முத்துராஜா சுமார் ஒரு மாத காலம் அங்கு தனிமைப்படுத்தப்படவுள்ளார்.


அக் காலகட்டத்தில், முத்து ராஜாவின் இரத்தம் தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு அதன் உடல்நிலை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கூறினார்.


தாய்லாந்து இனி வேறு எந்த நாட்டுக்கும் யானைகளை  பரிசளிக்காது


ஒரு மாத தனிமைப்படுத்தலுக்குப் பிறகு, முத்துராஜாவைப் பார்க்க பொதுமக்களை எவ்வாறு அனுமதிப்பது என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசிப்பார்கள், மேலும் யானை மையம் நிச்சயமாக முத்துராஜாவை பார்க்க பொதுமக்களை அனுமதிக்கும் என்றும் தாய்லாந்து சுற்றாடல் அமைச்சர் கூறினார்.


அடிப்படை சிகிச்சைக்குப் பிறகு முத்துராஜா குணமடைய சுமார் இரண்டு வாரங்கள் ஆகும் என கூறிய , ஆனால் கால்நடை மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.


அதேவேளை எதிர்காலத்தில் தாய்லாந்து யானைகளை வேறு எந்த நாட்டுக்கும் பரிசாக வழங்காது எனவும் தாய்லாந்து சுற்றாடல் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.  

No comments

Powered by Blogger.