Header Ads



ஆர்ப்பாட்டங்களை கண்டு அஞ்சும் ரணில், கொழும்புக்குள் JVP உட்புக தடைக்கு மேல் தடை


கொழும்பில் பல முக்கிய இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தடை விதித்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா  உள்ளிட்டவர்களுக்கு எதிராக  நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.


கோட்டை பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட விளக்கமளிப்பிற்கு அமைய கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


அதன்படி இன்று நண்பகல் 12.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை பின்வரும் இடங்களில் போராட்டங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதியின் செயலகம்

ஜனாதிபதி மாளிகை,

நிதி அமைச்சு

மத்திய வங்கி,

பொலிஸ் தலைமையகம்,

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து  CTO சந்திப்பு வரையான ஒல்கொட் மாவத்தை

CTO சந்திப்பிலிருந்து செராமிக் சந்தி NSA சுற்றுவட்டம் வரையான லோட்டஸ் வீதி

யோர்க் வீதி

வங்கி மாவத்தை

செதம் மாவத்தை

முதலிகே மாவத்தை

பரோன் ஜயதிலக மாவத்தை

பொலிஸ் தலைமையகம் எதிரில்

பாலதாக்ச மாவத்தை

சைத்யா வீதி

ஜனாதிபதி மாவத்தை

காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து NSA சுற்றுவட்டம் வரையான காலி வீதியுடன் ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட காலிமுகத்திடல் வளாகம்.

No comments

Powered by Blogger.