Header Ads



மகிந்த தோல்வியடையும் போது இலங்கை வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடாக இருந்தது


மகிந்த தோல்வியடையும் போது இலங்கை வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடாக இருந்தது, துரதிஷ்டவசமாக உலகில் கீழ் மட்டத்தில் பொருளாதார வளர்ச்சி வேகம் இருந்த நாட்டை கோட்டாபய ராஜபக்ச பொறுப்பேற்க நேரிட்டது.


வெளிநாடுகளில் இருந்து டொலர்களை பெற்று அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தியவர்கள் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


போராட்டத்திற்கு இடையில் சில கட்சி அரசியல் இலாபத்தை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டன.இளைஞர்களை பொறிக்குள் தள்ளி தமது தேவைகளை நிறைவேற்றவே தற்போதும் அந்த கட்சிகள் முயற்சித்து வருகின்றன.


மகிந்த ராஜபக்சவின் அரசியல் பயணத்தில் 2005 ஆமு் ஆண்டு முதல் இரத்தினபுரி மாவட்ட மக்கள் மிகப் பெரிய ஒத்துழைப்புகளை வழங்கினர்.


2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச நாட்டை பொறுப்பேற்ற போது எமது பொருளாதாரம் 17 பில்லியன் டொலர்களாக இருந்தது.


17 ஆண்டுகள் செல்லும் போது எமது அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை 80 பில்லியன் டொலர்களாக அதிகரித்தது.


எமது அரசாங்கம் வேலையில்லா திண்டாட்டத்தை தனி இலக்கத்திற்கு கொண்டு வந்தது.


2015 ஆம் ஆண்டில் நாங்கள் தோல்வியடையும் போது, இலங்கை வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக இருந்தது. சீனாவுக்கு அடுத்த இடத்தில் இலங்கை இருந்தது.


இந்த நிலையில், துரதிஷ்டவசமாக உலகில் கீழ் மட்டத்தில் பொருளாதார வளர்ச்சி வேகம் இருந்த நாட்டை கோட்டாபய ராஜபக்ச பொறுப்பேற்க நேரிட்டது.


ஒற்றை இலக்கத்தில் இருந்த வங்கி கடன் வட்டி வீதம் இரண்டு இலக்கங்களாக அதிகரித்திருந்தது.


ராஜபக்சவினருக்கு சேறுபூம் முன்னாள் கமத்தொழில் அமைச்சரான அனுரகுமார திஸாநாயக்க, ராஜபக்ச அரசாங்கத்தை விட நல்லாட்சி அரசாங்கமே அதிகமான கடனை பெற்றதாக கூறுகிறார்.


அப்படியானால், நாட்டின் கடன் சுமையை அதிகரித்தது, ராஜபக்ச அரசாங்கமா அல்லது நல்லாட்சி அரசாங்கமா என்பது மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. கடன் பெறல் என்ற பெயரில் வௌிநாடுகளிலிருந்து பெற்றுக் கொண்ட கோடான கோடி டொலர்களுக்கு என்ன நடைபெற்றது என்றால் அது போன வழி யாருக்கும் தெரியாது. டொலர் கொட்டியது தெரிந்தது, ஆனால் அந்தப் பணம் என்ன அபிவிருத்திக்கு, முன்னேற்றத்துக்குச் செலவழித்தது என்ற குறிப்புகள் எங்கும் இல்லை. மிக அண்மையில் கிழட்டு மைனா பங்களாதேஷ் சென்று பிரதமர் ஹஸீனா பேகமிடமிருந்து பெற்றுக் கொண்ட 200 மில்லியன் டொலர்களைப் பாவித்து என்ன முன்னேற்றங்கள் நடைபெற்றன என்றால் அதற்கு சரியான பதில் இல்லை. எனவே வௌிநாட்டுக்கடன்கள் என்ற பெயரில் கிடைத்த பணம் அனைத்தும் கிழட்டு மைனா குடும்பத்தின் வௌிநாட்டுக்கணக்குகளில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை பற்றிய எந்த குறிப்புகளும் ஆதாரங்களும் யாரிடமும் இல்லை. அந்தக் காரணத்தால் தான், தான் நாட்டின் ஒரு டொலரையேனும் களவாடவில்லை, அப்படி களவாடியிருந்தால் நிரூபியுங்கள் பார்ப்போம் என இறுமாப்படிப்பது அந்த காரணத்தால் தான். ஆனால் அந்த கிழட்டு மைனக்கூட்டம் அத்தனையும் கேவலப்பட்டு,அவமானப்பட்டு இழிவுபட்டு நாசமாகப் போக வேண்டும் என நாம் இறைவனிடம் பிரார்த்திப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.