Header Ads



தான் பயணித்த பேருந்துக்கு பலியான யுவதி


அவிசாவளை பிரதான வீதியில் உள்ள உக்வத்தை மயானத்திற்கு முன்பாக, 23 வயதுடைய யுவதி ஒருவர், தான் பயணித்த அதே பேருந்து மோதியதில் உயிரிழந்துள்ளார்.


இந்த விபத்து சம்பவமானது இன்று (25.06.2023) இடம்பெற்றுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


புவக்பிட்டிய, அவிசாவளை, பிரகதிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய டொலவகே டோனா திலக்ஷி டில்ஷிகா என்ற யுவதியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த யுவதியின் சடலம் அவிசாவளை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனை நாளை (26.06.2023) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments

Powered by Blogger.