Header Ads



யாழ்ப்பாணம் - ஒஸ்மானியா கல்லுரிக்கு புதிய அதிபர்


யாழ்ப்பாணம் ஒஸ்மானியாவின் புதிய அதிபர் என்.எம்.சாபி அடுத்த வாரம் கடமைகளைப் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது


தற்பொழுது மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றிவரும் என்.எம்.சாபி (இ.அ.சே தரம் 1) அடுத்தவாரம் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியின் புதிய அதிபராகப் பொறுப்பேற்பார்.


புதிய அதிபருக்கான நியமனக் கடிதம் இன்று (22) வடக்குமாகாண கல்வி அமைச்சிலிருந்து மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அதிபர் உள்ளிட்டவர்களுக்கு தபாலிடப்பட்டுள்ளது. இன்னும் இரு தினங்களில் குறித்த கடிதம் அவர்களுக்கு கிடைக்கப்பெறும். இந்த செய்தியை இன்று (22) இரவு பாடசாலையில் இடம்பெற்ற பெற்றோர் சந்திப்பின் போது  உறுதிப்படுத்தப்பட்டது.


No comments

Powered by Blogger.