Header Ads



கனடா பிரதமருக்கு எதிராக, சிங்கள ராவய கொழும்பில் ஆர்ப்பாட்டம்


கனடா பிராமர் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கை தொடர்பில் வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பிலுள்ள கனேடிய தூதரகத்திற்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை (23-06-2023) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.


இலங்கை இராணுவம் போர்க்குற்றத்தை இழைக்கவில்லையெனத் தெரிவித்தும் புலிகளே போர்க்குற்றத்தை இழைத்ததாகவும் அதற்கு சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.


கொழும்பிலுள்ள கனேடிய தூதரகத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் சிங்கள ராவைய தலைமையில் இடம்பெற்றது.


No comments

Powered by Blogger.