Header Ads



கொழும்புக்கு சென்ற பஸ் எரிந்து நாசம்


யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.


இதனால் பேருந்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மதுரங்குளிய கரிகெட்டிய பிரதேசத்தில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


எப்படியிருப்பினும் இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.


இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.