Header Ads



3 நாட்கள் ஒழிந்திருந்த வீரவங்ச நீதிமன்றத்தில் அஜர்


கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று (21) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.


கடந்த 19ஆம் திகதி விமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் அவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.


2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் சைட் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்த போது, ​​கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவா் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.