Header Ads



"சகல பிரச்சினைகளுக்கும் தீர்வை, வழங்கக்கூடிய ஒரே தலைவராக ரணில்"


அரசியல் மற்றும் பொருளாதாரம் என நாட்டிலுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைப் பெற்றுத்தரக்கூடிய, தீர்வை வழங்கக்கூடிய ஒரே தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திகழ்கின்றார் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.


எனவே, ரணிலின் ஆட்சிக்காலத்தில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைப் பெற இன, மத, கட்சி பேதமின்றி அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.


இந்த அரிய சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் எந்தக் காலத்திலும் நாம் தீர்வைப் பெற முடியாது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.


சர்வதேச நாணய நிதியம்


இதேவேளை, ரணில் இல்லாமல் சஜித், அநுர ஜனாதிபதியாகி இருந்திருந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் பணம் இலங்கைக்கு நிச்சயமாகக் கிடைத்திருக்காது என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் கூறுகையில், "தாம் ஆட்சிக்கு வந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சித் திட்டத்தில் இருந்து விலகுவார்கள் என்று சஜித் தெளிவாகக் கூறியுள்ளார்.


அதேவேளை, சர்வதேச நாணய நித்தியத்திடம் சென்ற எந்த நாடும் முன்னேறியது இல்லை என்ற கருத்தை ஜே.வி.பி. கூறி இருந்தது. ஆனால், ரணில் ஜனாதிபதியானது முதல் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியைப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.


அவரால்தான் இது சாத்தியமானது. மறுபுறம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. எமது நாட்டு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணம் அனுப்புவதும் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இந்த தினேஷ் என்ற கம்யுனிஸவாதி, இரவும் பகலும் மிக மோசமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்து பொதுமக்களைத் தூண்டி மிகவும் கீழ்த்தரமாக அவமதித்த ரணிலை ஏக தலைவராகப் பாராட்டும் இந்த கம்யுனிஸவாதிக்கு பதவியைக் காப்பாற்றிக் கொண்டு இன்னும் 200 வ ருடங்கள் வாழ்வதைத் தவிர வேறு எந்த நோக்கமும் கிடையாது என்பதை கீழ்வரும் அவருடைய வார்த்தைகளைப் பாருங்கள். ''அரசியல் மற்றும் பொருளாதாரம் என நாட்டிலுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைப் பெற்றுத்தரக்கூடிய, தீர்வை வழங்கக்கூடிய ஒரே தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திகழ்கின்றார் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.'' வெட்கம், ரோஷம், மானம்,மரியாதை என்பதற்கு கம்யுனிஸத்தில் தெரிவித்துள்ள வரைவிலக்கணத்தைப் பாருங்கள். இந்த நாட்டு மக்கள் அனைவரும் எருமைகள் எனவும், பாராளுமன்றத்தில் உள்ள மந்தி(ரி)கள் அனைத்தும் உலகில் சிறந்த மட்டைகள் என்பதை இது தௌிவாகக் காட்டுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.