Header Ads



யார் சொல்வது சரி..?


ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகத் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


கொலன்னாவையில் நேற்றைய தினம் (02.04.2023) இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


மேலும், திசாநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


எனினும் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளவர்கள், பணத்திற்காக தங்கள் நாடாளுமன்ற ஆசனங்களைத் தியாகம் செய்ய மாட்டார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தி வருகிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.