Header Ads



மக்கள் தவிக்க, 2000 இலட்சத்துக்காக நாளை அரசுடன் இணையும் Mp க்கள் யார்..?


 ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் குழுவொன்று நாளை (4) அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளத் தயாராக இருப்பதாக கடந்த வாரம் பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட நடவடிக்கை எடுத்திருந்தன.


அரசாங்கத்தில் இணைந்து கொண்டால் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு 2000 இலட்சம் வழங்குவதற்கு பல்வேறு தரப்பினரால் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும்பண்டார ஆகியோர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தனர். .


நாடு திவாலாகி, உணவு இன்றி, வேலையின்றி மக்கள் தவிக்கும் இவ்வேளையில், இப்படி 2000 இலட்சத்துக்காக அரசாங்கத்துடன் இணையும் எம்.பி.க்கள் யார் என மக்கள் மத்தியில் பெரும் கேள்வி ஏற்பட்டுள்ளது.


கடந்த காலங்களில் மக்களை வீதிக்கு இறக்கிய போராட்டத்தின் கோரிக்கைகளில் ஒன்று, இந்த கட்சி மாறும் அரசியலும், பணத்திற்காக கட்சி மாறும் அரசியல் கலாசாரமும் நிறுத்தப்பட வேண்டும் என்பதே.


அதன்படி அரசியலில் ஆர்வம் உள்ள பலரும் நாளை யார் கட்சி மாறுவார்களா என காத்திருக்கின்றனர்.

No comments

Powered by Blogger.