Header Ads



சக்தி (TV/FM) குழுமத்தின் இப்தார் கோரிக்கையை நிராகரிகின்றோம்


ஒருசில தமிழ் பேசும் ஊடகங்களை, முஸ்லிம்  மக்கள் தமக்குரிய ஊடகங்களாக  நம்பிவந்தனர். ஆனால் அவர்களோ முஸ்லிம் மக்களை தமது தேவைகளுக்காக பயன்படுத்தும் ஒரு கருவியாகவே உபயோகித்து வந்தமையை எமது மக்கள் நன்கு அறிவார்கள்  


1911 ம் ஆண்டுக்குப் பின்னர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்கள கடும்போக்காளர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட மிகவும் கொடூரமான  நாடகம்   அம்பாரை,கண்டி திகனை கலவரமாகும் 


அவ்வேளையில் முஸ்லிம் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும்  எங்களது மக்களின் உயிரிழப்பின் ஓலங்கள் உங்கள் காதுகளை துளைத்துக்கொண்டிருந்த வேளையிலும் செவிடர்கள் குருடர்கள் போல் நடந்துகொண்டுவிட்டு சட்டச் சிக்கலால் செய்திகளை  ஒளிபரப்ப முடியாமல்போனது  என்றுகூறிய பச்சோந்திகள் நீங்கள் 

 

ஆனால் ஏப்ரல் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் மக்களின் வீடுகளில் காணப்பட்ட மரம்வெட்டும் கத்திகளைக்கூட  ஆயுதங்களாக செய்திவெளியிட்டு வஞ்சம் தீர்த்த பாவிகள் நீங்கள்

 

புனிதமான இம்மாதத்தில் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் எம்மக்களால்  நோற்கப்படும் நோன்பினை பாவிகள்  உங்களது பணத்தினில் நோன்புதிறக்க அனுமத்திக்க முடியாது என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம் 

No comments

Powered by Blogger.