Header Ads



SJB யின் முக்கிய 3 தூண்கள் பல்டி அடிப்பார்களா..? ஹர்ஷவின் பதிலடி


ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் அரசாங்கத்தில் இணைவார்கள் என்ற ஊகங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நேரத்தில் கட்சி அரசியல் முக்கியமில்லை என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.


ஹர்ஷ டி சில்வா ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், இந்த நேரத்தில் கட்சி அரசியல் முக்கியமில்லை, தேசத்தை கட்டியெழுப்ப சரியான சித்தாந்தத்தை கடைப்பிடிப்பதே இப்போது முக்கியம், என்றார்.


“எங்களைப் பற்றிய ஊகங்களிலிருந்து ஒருவர் புரிந்து கொள்ளக்கூடியது என்னவென்றால், தேசத்தை கட்டியெழுப்பக்கூடிய திறமையானவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளனர்,” என்பதே ஆகும்.


தேசத்தை கட்டியெழுப்ப விரும்புவோருக்கு புதிய ஆணை தேவை என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.