IMF இடம் கடன் பெற்றது பற்றி, பெருமையடைபவர்களுக்கு JVP யின் சாட்டையடி
சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) கடன் உதவி நாட்டை இன்னும் பெரிய கடன் சுமைக்குள் தள்ளும் என்றும் இவ்வாறான கடனை பெற்றுக்கொள்வது தொடர்பில் பெருமையடையாது வெட்கப்பட வேண்டும் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐஎம்எப் கடன் உதவி வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தில் உள்ளவர்கள் உற்சாகமாக இருப்பதாகவும் இவ்வாறான கடன் உதவியை பெறுவது தொடர்பில் உண்மையில் வெட்கமடைய வேண்டும் என்று குறிப்பிட்டார்.
Post a Comment