Header Ads



கிரிக்கெட் விளையாடப் போவதாக கூறிவிட்டு சென்ற, வீட்டில் ஒரே பிள்ளைக்கு நேர்ந்த கதி


நேற்று (26) மாலை  மணியளவில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞன் வயங்கொடை வியாலாகொட நீரேரியில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வயங்கொடை காவல்துறையினர் தெரிவித்தனர்.


வயங்கொடை மாலிகதென்ன பிரதேசத்தை சேர்ந்த குடும்பத்தில் ஒரே பிள்ளையான 21 வயதான மல்ஷானி விக்ரமரத்ன என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த இளைஞன் கிரிக்கெட் விளையாடப் போவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு மேலும் 08 இளைஞர்களுடன் நீராடச் சென்றுள்ளார்.


ஏனைய இளைஞர்கள் நீந்துவதற்காக நீரில் குதித்ததாகவும், பின்னர் இந்த இளைஞன் தனக்கும் நீந்தத் தெரியும் என தனது நண்பர்களிடம் கூறிவிட்டு நீரில் குதித்துள்ளதாக காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


நீரில் மூழ்கிய இளைஞன் மீட்கப்பட்டு வட்டுபிட்டியால ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


வட்டுபிட்டியால ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீரில் மூழ்கி மரணம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.