Header Ads



மீண்டும் வந்தார் நாலக டி சில்வா


பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.


உடன் அமுலாகும் வகையில், பொலிஸ் ஆணைக்குழுவினால் அவர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.


2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபராக செயற்பட்ட காலப்பகுதியில், நாலக டி சில்வா பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


பிரமுகர் கொலை சதி முயற்சி தொடர்பில் நாலக டி சில்வா கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

No comments

Powered by Blogger.