Header Ads



இனிமேல் களமிறங்கவும் மாட்டேன், பல்டி அடிக்கவும் மாட்டேன்


அரசியலில் இருந்து ஓய்வுபெறும் எண்ணத்துடனேயே இருக்கின்றேன். இம்முறை மாத்திரமே தேர்தலில் போட்டியிடுகின்றேன். இனி போட்டியிடப்போவதில்லை என  ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயருமான ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார்.


இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-


நான் கொள்கை அடிப்படையில் அரசியல் நடத்தும் நபர். எனவே, ஐக்கிய தேசியக் கட்சியை விட்டுச் செல்லமாட்டேன். தேசிய அரசியலில் இருந்து ஓய்வுபெறத் திட்டமிட்டேன்.


கோவிட், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் மேயராக சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் போனது. எனவே, திட்டங்களை முன்னெடுக்கவும், நான் தலைமைத்துவம் வழங்கிய அணிக்காகவுமே இம்முறை போட்டியிடுகின்றேன். இனிமேல் தேர்தலில் களமிறங்கமாட்டேன்  என்றார். 

1 comment:

  1. 85 வயதையும் தாண்டி இன்னமும் இளம் வாலிபப் பெண்ணாக நினைத்துக் கொண்டு அரசியல் செய்யும் இந்த மாதுக்கு வயது செல்வதே இல்லை. இன்னமும் ஒரு தடவையல்ல, மூன்று தடவைக்கு மேல் போட்டியிட சந்தர்ப்பம் இருந்த போதிலும் அவர் இளைஞர்கள், யுவதிகளுக்காக பதவியை விட்டுக் கொடுத்திருக்கின்றார்.

    ReplyDelete

Powered by Blogger.