Header Ads



எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, குமார வெல்கமவிடம் ஒப்படைக்கக் கோரிக்கை


எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குச் சஜித் பிரேமதாச பொருத்தமானவர் அல்லர், அந்தப் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிடம் ஒப்படைக்கவும் என நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன கோரிக்கை விடுத்துள்ளார்.


மொட்டுக் கட்சி தலைமையகத்தில் இன்று (23.03.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்க்கட்சித் தலைவருக்குரிய பணியை சஜித் பிரேமதாச சரிவர நிறைவேற்றவில்லை. ஆனால், குமார வெல்கம சிறப்பாகச் செயற்படுகின்றார்.


எனவே, தற்போதைய சூழ்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை குமார வெல்கமவிடம் ஒப்படைக்குமாறு நாம் சஜித் பிரேமதாசவிடம் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.