சாலிய பீரிஸின் அறைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம், பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அவசர கோரிக்கை
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ் மா அதிபருக்கு எழுதிய கடிதத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை பொலிஸார் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸின் அறைக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வாடிக்கையாளரைப் பொறுத்தவரையில் பீரிஸ் தனது தொழில்சார் கடமைகளை மேற்கொள்வது தொடர்பாக மேற்படி எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
“இந்தப் போராட்டம் ஒரு வாடிக்கையாளரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமையை, சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட ஒரு தொழில்முறை உரிமையை கடுமையாகத் தடுக்கிறது என நாங்கள் கருதுகிறோம்,” என சங்கம் தெரிவித்துள்ளது.
“எனவே, சட்டத்தரணியாக பீரிஸின் தொழில்சார் கடமைகள் தடைபடாதவாறு மற்றும் அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் கடுமையாகக் கோருகிறோம்” என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment