Header Ads



நாங்கள் ஒரு தவறு செய்து விட்டோம்


நாங்கள் ஒரு தவறு  செய்து விட்டோம், அன்றும் சொன்னேன் இன்றும் சொல்கிறேன். இதுவரை அரசியல் செய்யாத கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தமை நாம் செய்த பெரும் தவறு என திருமதி பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.


பொதுஜன பெரமுனவின் பண்டாரகம அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,


அந்தத் தவறுக்குப் பிறகு கட்சிக்குள் சுயவிமர்சனத்துக்குச் சென்று மீண்டும் அந்தத் தவறைச் செய்ய மாட்டோம் என்ற முடிவுக்கு வந்தோம். அரசியல் செய்யாத ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம் என்ற முடிவுக்கு வந்தோம்


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.





No comments

Powered by Blogger.