Header Ads



சீக்கி மங்கி உணவக உரிமையாளர் வயிற்றில் பல தடவைகள் சுடப்பட்டு படுகொலை


சீக்கி மங்கி உணவக உரிமையாளரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


மிதிகமவை வசிப்பிடமாக கொண்ட 32 வயதான பசிந்து சந்தருவன், நேற்று இரவு வேனில் இனந்தெரியாத நபர்களுடன் வந்த துப்பாக்கிதாரி ஒருவரால் சுடப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இன்று -30- உயிரிழந்தார்.


குறித்த உணவக உரிமையாளர் தனது உணவகத்திற்கு வெளியே மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கொண்டிருந்த போது, T56  ரக துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


துப்பாக்கிதாரி பலமுறை பசிந்துவின் வயிற்றில் துப்பாக்கியால் சுட்டதாக  தெரிவிக்கப்படுகிறது.


மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது குறித்த நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.


துப்பாக்கிப் பிரயோகத்தின் காரணத்தைக் கண்டறியவும் சந்தேக நபர்களைக் கைது செய்யவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.