Header Ads



லண்டனில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்


யாழ்ப்பாணத்தில் இருந்து இங்கிலாந்து சென்று லண்டனில் வசித்து வந்த ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொலை செய்யப்பட்டவரின் உடல் லண்டன் Harrow பிரதேசத்தில் பாழடைந்த இடமொன்றில் போடப்பட்டிருந்த நிலையில் நேற்று பொலிஸார் மீட்டுள்ளனர்.


கந்தசாமி பிரபாகரன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான 42 வயதான இந்த நபர், தனது குடும்பத்துடன் லண்டனில் வசித்து வந்ததுடன் வர்த்தகம் மற்றும் சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.


யாழ்ப்பாணம் சாவகச்சேரி சரசாலை பிரதேசத்தை சொந்த இடமாக கொண்ட இவர் சுமார் 8 வருடங்களுக்கு முன்னர் லண்டனுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளார்.


அவர் உயிரிழந்த விதம் அல்லது அதற்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவரவில்லை.


லண்டன் Harrow பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.