Header Ads



கொழும்பில் சவூதி இப்தாரில் ஈரான் தூதுவர், முஸ்லிம் அரசியல்வாதிகளும் திரண்டனர் (படங்கள்)

கொழும்பில் உள்ள சவூதி அரேபியத்  தூதராலயம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு காலிமுகத்திடல் ஹோட்டலில் நடைபெற்றது. 


அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் இயக்கங்களின் பிரதிநிதிகள், ராஜதந்திரிகள் எனப் பெருந்தொகையானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 


சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதுவர் காலித் ஹமூத் அல் கத்தாணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முதன்முறையாக இலங்கையில் உள்ள ஈரானியத் தூதுவர் கலந்து கொண்டிருந்தார்.


இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான உறவு மீண்டும் மலரத் தொடங்கியதை அடுத்து சவூதி அரேபிய, ஈரான் நிகழ்வுகளில் இருநாடுகளின் ராஜ தந்திரிகள் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

- அஷ்ரப் ஏ சம்த் -







No comments

Powered by Blogger.