Header Ads



அமித் வீரசிங்ஹவின் அலுவலகத்திற்கு நேர்ந்த கதி


- ஷேன் செனவிரத்ன -


கண்டி பொலிஸ் அதிகாரத்துக்கு உட்பட்ட தென்னக்கும்புர பிரதேசத்தில் உள்ள சமூக சேவைகள் நிலையத்தில் ஏற்பட்ட தீயினால், அங்கு வைக்கப்பட்டிருந்த இலட்சக்கணக்கான ரூபாய் பெறுமதியான பாடசாலை புத்தகங்கள் மற்றும் ஒருதொகை உபகரணங்கள் தீயில் கருகி நாசமடைந்துள்ளன.


இந்த நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள “மஹாசோஹொன் படை” என்ற அமைப்பின் ஸ்தாபகர் என்று அறியப்பட்ட அமித் வீரசிங்ஹவால் இந்த அலுவலகம் நிர்வகிக்கப்பட்டுவந்துள்ளது.


இன்று (20) அதிகாலை ஏற்பட்ட தீயினால், பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் யாவும் அவை நாசமாகியுள்ளன. அவை, பாடசாலை மாணவர்களுக்கு இன்று (20) விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.