தமிழ் ஊடகத் துறைக்குள் பாலியல் இலஞ்சம் பிரச்சினைக்கு நான் முகம்கொடுத்தேன்
தமிழ் ஊடகத் துறைக்குள் பாலியல் இலஞ்சம் தொடர்பான பிரச்சினைகளுக்கு நான் முகம்கொடுத்தேன் என இலங்கையின் தமிழ் ஊடகத்துறையில் பல வருடங்களாக மிளிர்ந்து வருபவரும், இலங்கை தமிழ் மற்றும் சிங்களத் திரைப்படத் துறையில் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவருமான நடிகை நிரஞ்சனி சண்முகராஜா தெரிவித்துள்ளார்.
TWin ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழ் பேசும் ஊடகத்துறைக்குள் தான் நான் இவ்வாறான சிக்கல்களை எதிர்கொண்டனர். அதனை நானே தனியாக இருந்து எதிர்கொண்டேன். முதலில் பெண் பிள்ளையாக இருந்தால் எமக்கு பிடிக்காத விடயங்களுக்கு “நோ” சொல்லிப் பழக வேண்டும்.
இலங்கை சினிமாத் துறைக்குள் நான் இவ்வாறான சிக்கல்களை எதிர்கொண்டது இல்லை. ஒருவர் வாய்ப்புக்காக உங்களை தவறாக அணுகுவார்கள் எனில் அதில் முடிவு எடுக்க வேண்டியது நீங்கள் தான். தவறான ஒன்றை செய்துதான் வாய்ப்பை பெற்றுக் கொள்ளவேண்டுமா என்பதை அவர் அவர்களே தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
Post a Comment