முஸ்லிம் மாணவர்களுக்கு அநீதி - பரீட்சை திணைக்களத்திடம் அவசர கோரிக்கை
- எம்.எல்.எஸ்.முஹம்மத் -
கடந்த 2022 (2023) ஆண்டு க.பொ.த.உயர் தர மனைப்பொருளியல் பாட எழுத்துப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 28.03.2023 முதல் 06.04.2023 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும், அனுமதி அட்டைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது எனவும் பரீட்சை திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
எனினும் மேற்படி மனைப்பொருளியல் பாட செயன்முறைப் பரீட்சை இடம்பெறவுள்ள காலப்பகுதியில் முஸ்லிம்கள் அனைவரும் புனித நோண்பு நோற்றிருப்பதால் செயன்முறைப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் அனைவரும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளனர்.
எனவே குறித்த மனைப்பொருளியியல் பாட செயன்முறைப் பரீட்சையை நோன்பு காலம் நிறைவு பெற்றதும் மேற்கொள்ளுமாறு செயன்முறைப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள முஸ்லிம் மாணவர்களும், பாடசாலை அதிபர்களும் பரீட்சை திணைகளத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
எனினும் செயன்முறைப் பரீட்சை தொடர்பாக பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில், செயன்முறை பரீட்சைக்குரிய திகதி தொடர்பில் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ள முடியாது எனவும் அறிவித்துள்ளது.
Post a Comment