Header Ads



சிறுவர் இல்லத்தை அடித்து நொறுக்கிய சிறுவர்கள்


யாழ்ப்பாணம் - திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் சைவச்சிறுவர் இல்லம் இன்று திங்கட்கிழமை(27) மாலை அடித்து நொருக்கப்பட்டுள்ளது.


சைவச் சிறுவர் இல்லத்தில் தங்கி உள்ளவர்களே உள்ளக முரண்பாடு காரணமாக சிறுவர் இல்ல அலுவலகம் மற்றும் விடுதியின் ஒரு பகுதி என்பன சேதமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சம்பவம் தொடர்பாக கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச் சங்க சைவச் சிறுவர் இல்ல விடுதி காப்பாளரொருவர் இன்று நீதிமன்ற உத்தரவின் படி பதவி விலக்கப்பட்ட நிலையில், அவரின் தூண்டுதலில் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களால் விடுதியின் பிரதான அலுவலகம் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 




No comments

Powered by Blogger.