Header Ads



ரங்காவுக்கான விளக்கமறியல் மேலும் நீட்டிப்பு


2011 ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் சாட்சிகளிடம் செல்வாக்கு செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்காவை எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


ஜே.ஸ்ரீ ரங்கா கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மார்ச் 17ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.


ஜூலை 30 2011 வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கின் சாட்சிகளை தாக்கி அச்சுறுத்திய குற்றத்திற்காக ஸ்ரீரங்காவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.