Header Ads



ஜனாதிபதி செயலகத்தில் கபீர் ஹாசிம் - வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் ரணிலுடன் பங்கேற்பு


ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் மதிப்பீட்டு அலுவலகத்தின் பணிப்பாளர்  மார்கோ செகோன் உள்ளிட்ட UNFPA அதிகாரிகள் அடங்கிய குழுவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (27) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர்.


 

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம்-UNFPA, கொள்கை, நிறுவன மற்றும் தொழில்சார் மட்டங்களில் வலுவான தேசிய மதிப்பீட்டு திறன்களை மேம்படுத்துவதில் இலங்கையின் சாதனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தது.


இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம், தேசிய மதிப்பீட்டு திறன் அபிவிருத்தி நிபுணர் திரு.அசேல களுகம்பிட்டிய மற்றும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் மதிப்பீட்டு அலுவலக அதிகாரிகள் குழுவினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD)

28-03-2023



No comments

Powered by Blogger.