Header Ads



இது பசில் ராஜபக்சவின் நம்பிக்கை


மொட்டுக் கட்சியின் வியூகங்களை எந்தக் கட்சியாலும் முறியடிக்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்றிடம் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 


மேலும் அவர் தெரிவிக்கையில், 


அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றியடைந்து ஆட்சியமைக்கும்.


தற்போது குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர். அவர்களின் அந்த முயற்சி பயனற்றது.


மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிரணிப் பக்கம் சென்றாலும் நாடாளுமன்றத்தில் தற்போது மொட்டுக் கட்சி பெரும்பான்மையை இழக்கவில்லை.

No comments

Powered by Blogger.