Header Ads



தேர்தலை நடத்தாமல் இருப்பது குற்றமாகும்


"தேர்தலைத் தொடர்ந்து ஒத்திவைக்க முடியாது என்றும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்ப்பமதகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


இன்றைய தினம் (30.03.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


அவர் மேலும் கூறியதாவது,




"குறித்த நேரத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பது குற்றமாகும்.


இது ஒரு நாட்டில் நடக்கக் கூடாத விடயம். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கின்றேன்.


மேலும், தேர்தலைத் தொடர்ந்து ஒத்திவைக்க முடியாது. தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.