ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் பட்டம்பெற்ற யுவதி படுகொலை
இரத்தினபுரி பகுதியில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
நிரியல்ல பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய யுவதியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 6.30 மணியளவில் குறித்த யுவதி தனது பணியிடத்திற்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
பின்னர், அவரது தொலைபேசி வேலை செய்யாததால், மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள வடிகான் ஒன்றின் கீழ் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
குறித்த யுவதி ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் படித்து சில மாதங்களுக்கு முன்பு பட்டம் பெற்றார்.
இக்கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
யார் ஆட்சி செய்தாலும் எமக்குப் பரவாயில்லை. இதுபோன்ற அநியாயங்கள், கொலைகள் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும். இந்த அநியாயத்தைச் சகிக்க முடியாது. காலையில் பணிக்காக வீட்டுக்கு வௌியில் சென்ற பெண் ஒரு சில மணி நேரங்களில் படுகொலை செய்யப்படுவது போன்ற பெரும்பாவத்தை மன்னிக்கவே முடியாது. இந்த கொலையாளிகளை பகிரங்கமாக இந்த நாட்டுமக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போது கொலைசெய்யப்பட சட்டம் மாற்றப்படாத வரை இந்த நாட்டுக்கு விடிவு இல்லை. இந்தஅப்பாவி மக்களுக்கு அரசாங்கம் உரிய பாதுகாப்பு வழங்காவிட்டால் இந்த நாட்டு மக்கள் யாரை நம்பி வௌியில் செல்லமுடியும். இந்த விடயத்தை என்ன காரணம் கொண்டும் மன்னிக்க முடியாது. இந்தக் கொலைகாரர்கள் பகிரங்கமாகக் கொலை செய்யப்படும் வரை பொதுமக்களும் அமைதியாக இருக்கக்கூடாது.
ReplyDelete