Header Ads



சங்கக்கார தெரிவித்துள்ள விடயம்


இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்த அடுத்த 5 - 10 வருடங்கள் சிறந்த நேரம் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.


ஒக்ஸ்போர்ட் மன்றத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், 


ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக குரல்கொடுக்க இலங்கையின் இளைஞர்கள் அண்மைக்காலமாக முன்வந்துள்ளனர்.


இந்த நிலையில், அந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நாடாக இலங்கை தற்போது காணப்படுகிறது.


எனினும் குறித்த மாற்றத்திற்கான நேரம் வேகமாக முடிவடைந்து வருகிறது.


எனவே எமக்கு கிடைத்துள்ள அந்த குறைந்தபட்ச நேரத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.