Header Ads



7 கோடி பெறுமதியான மோட்டார், சைக்கிள்களுடன் தொழிலதிபர் கைது


சுமார் ஏழு கோடி ரூபா பெறுமதியான எட்டு அதிசக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்களுடன் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.


மேல் மாகாண புலனாய்வுப் பிரிவுக்குட்பட்ட கல்கிசை பிரிவின் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பொரலஸ்கமுவ பல்கலைக்கழக வீதியிலுள்ள தனக்குச் சொந்தமான நிறுவனமொன்றில் சந்தேக நபர் இந்த மோட்டார் சைக்கிள்களை இரகசியமாக மறைத்து வைத்துள்ளதாக சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட 6 மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டதாக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், மற்ற இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய வர்த்தகர் சமர்ப்பித்த ஆவணங்கள் மேலதிக விசாரணைக்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மோட்டார் பரிசோதகர்கள் மற்றும் அரசாங்க பரிசோதகரிடம் சமர்ப்பிக்கப்படும்.


இதன்படி, சந்தேகநபர் நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.