Header Ads



4 ஜனாஸக்களும் மீட்கப்பட்டன


அம்பாறை மாவட்டத்திலிருந்து சுற்றுலா சென்று  நீராடச்சென்ற 4 இளைஞர்கள் நேற்று செவ்வாய்கிழமை  (21) காணாமல் போயிருந்தனர்.  அதில் ஒருவரின் உடல் மரணித்த நிலையில்  நேற்றே  மீட்கப்பட்டது.


இவ்வாறான நிலையில் நீர்வீழ்ச்சியில் காணாமல் போன மற்றைய 3 பேரினதும் ஜனாஸாக்கள் இன்று புதன்கிழமை, 22 ஆம் திகதி மீட்கப்பட்டன. இதற்கு கடற்படையும் உதவியும் பெறப்பட்டிருந்தது.


இவர்கள் கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறைப் பிரதேசங்களைச்சேர்ந்த  22 முதல் 23 வயதுக்குட்பட்ட நான்கு இளைஞர்களாகும். 


மரணடைந்தவர்கள் கப்றுடைய வாழ்விலும், மறுமை வாழ்விலும் ஈடேற்றம் பெற அல்லாஹ்விடம் பிராத்திப்போம்.


No comments

Powered by Blogger.