Header Ads



30 வழக்குகளுடன் தொடர்புடைய கைதி தப்பியோட்டம்


பத்தேகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காலி சிறைச்சாலையின் கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.


குறித்த கைதி நேற்று (28) நீதிமன்ற அறையின் யன்னல் வழியாக தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


போதைப்பொருள் மற்றும் திருட்டு குற்றச்சாட்டில் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிரு்நத பத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார்.


இவர் மீது போதைப்பொருள் தொடர்பான சுமார் 30 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


தப்பியோடிய கைதியை கைதுசெய்ய 5 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.