Header Ads



சோமாலியாவில் 17 மில்லியன் மக்களுக்கு உடனடி உதவிகள் தேவை


 சோமாலியாவில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக மழை பொய்த்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள உணவு தட்டுப்பாடால், பசி பட்டினி அதிகரித்து வருகிறது. 


தற்போது, 17 மில்லியன் மக்களுக்கு உடனடி உதவிகள் தேவைப்படுவதாக ஐ.நா தெரிவித்துள்ளது. 


லண்டனை சேர்ந்த அறிவியலாளர்கள் நடத்திய ஆய்வில், 


கடந்த ஆண்டு உயிரிழந்தவர்களில், 50 விழுக்காட்டினர் 5 வயதிற்கும் கீழ் உள்ள வயதினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, 2017 மற்றும் 2018 ஆண்டுகளை விட மிக மோசமான பாதிப்பு என்றும், இந்த ஆண்டு உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. சோமாலியாவில் ஒருகோடி எழுபது இலட்சம் பேர் பசியால் வாடுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கின்றது. யார் அவருக்கு உதவி செய்ய வருவார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.