ரணில் பெற்ற 12 பில்லியன் டொலர்களுக்கு என்ன நடந்தது..?
பாணந்துறையில் இடம்பெற்ற பேரணியின் போது, NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்வதையோ அல்லது அபிவிருத்தியை அடைய கடன்களை பெற்றுக்கொள்வதையோ நம்ப முடியாது என தெரிவித்தார்.
கடந்த மூன்று நான்கு தசாப்தங்களாக இந்த அணுகுமுறை தோல்வியுற்றதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டமானது கடன்கள் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்வதாக இருந்தால், 2015-2019 காலப்பகுதியில் 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற்றிருந்த காலப்பகுதியில் அவர் அதனைச் செய்திருக்க முடியும் என்றும் எம்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டார்
Post a Comment