பாராளுமன்றத்திற்குள் எல்லோரையும் சிரிக்கவைத்த சபாநாயகர், பின்னர் தவறை ஒப்புக் கொண்டார்
நாடாளுமன்றில் நேற்று (17) அமர்வின் முதல் நாளில் பிரதி சபாநாயகருக்கான வாக்கெடுப்பு, இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைத்த சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன,
சரத் பொன்சேகாவை அழைத்தபோது தவறுதலாக கோட்டாபய ராஜபக்ச என்று அழைத்து விட்டார்.
இதன்போது எழுந்த சரத் பொன்சேகா உட்பட்ட முழு சபையினரும் சிரித்தனர்.
எனினும் சபாநாயகர் தாமும் சிரித்தப்படி சுதாகரித்துக்கொண்டு தமது தவறை ஒப்புக்கொண்டு சரத் பொன்சேகா என்று சரியாக பெயரை உச்சரித்தார்.
Post a Comment