Header Ads



எதிர்க் கட்சிக்கு ஆளும்கட்சி Mp விடுத்துள்ள சவால்


இந்த பாராளுமன்றத்தின் கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர், எரிபொருள், காஸ், டீசல், மண்ணெண்ணெய் வரிசைகளுக்குச் சென்று நாங்கள் எதிரணியினர் எனக் கூறுங்கள் பார்ப்போம் என எதிர்க்கட்சியினருக்கு சவால் விடுத்த ஆளும் கட்சியின் எம்.பியான இந்திக அனுருத்த, உள்ளே செய்யமுடியாததை வெளியே சென்று செய்கின்றனர் என்றார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காண்பிக்க வேண்டுமாயின், அனுரகுமார திஸாநாயக்கவுக்கு 105 பேர் தேவை. சஜித்துக்கு 70 பேர் தேவை, ரணில் விக்கிரமசிங்கவுக்கு 112 பேர் தேவை. அதனால்தான், பாராளுமன்றத்துக்குள் செய்யாமல், வெளியே கொண்டு சென்றுவிட்டனர் என்றார்.

பாண் விற்பவர்களையும் நாய்க்குத் தெரியும், மீன் விற்பவர்களையும் நாய்க்குத் தெரியும் என்று தெரிவித்த அவர், பாண் விற்பனை செய்பவரை கண்டு குரைக்கும் நாய், மீன் விற்பவரைக் கண்டு ஏன்? குரைப்பதில்லை. ஆகையால்தான், இந்த பாராளுமன்றம் நிறைவடைந்ததன் பின்னர் வரிசைகளுக்குச் சென்று, நாங்கள் எதிரணியினர் எனக் கூறுங்கள் பார்ப்போம் என சவால் விட்டார்.

1 comment:

  1. In Fact, everyone knows that Rajapaksa family and their Followers are the Thieves, Robbers & Mafias who destroyed our country & let the whole Sri Lankan people to the streets to line up and starving for everything for their life.
    As some of the dirty SOBs are the backyard DOGS of Rajapaksa family and Followers, They have to protect them for the rest of their plate meals and bones.
    BIG SHAME TO WHOLE FAMILY AND THE COMMUNITY AS WELL

    ReplyDelete

Powered by Blogger.