Header Ads



Mp க்களை பணத்திற்கு வாங்கும் பசில், வீடு வீடாக சென்று பேச்சு (வீடியோ) சஜித் பிரேமதாச கண்டனம்


முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ தனது அதிகாரத்தை பாதுகாப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை பணத்திற்கு வாங்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

அதிகாரத்தை விலைக்கொடுத்து வாங்கும்போது மலிவானதாகிவிடுகிறது. எனவே, உடனடியாக இச்செயலை நிறுத்துமாறு பசில் ராஜபக்ஷவை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது ட்விட்டர் தளத்தில் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் விற்பனைக்கு இல்லை எனவும், நீங்கள் மற்றவர்களை வாங்க முடிந்தால், எச்சரிக்கையாக இருங்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தனது தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இயக்கும் குழுவினர், தற்போது தமது தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு சென்று, வரப்பிரசாதங்களை வழங்கி, மீண்டும் அரசாங்கத்துடன் இணைத்துக்கொள்ளும் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.