Header Ads



அரசாங்கத்திற்குள் பிளவு - புதிய பிரதமரை நியமிக்க ஆளுங்கட்சியின் பின்வரிசை Mp க்கள் 13 பேர் ஜனாதிபதியிடம் நேரில் கோரிக்கை


நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரையும் இணைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு, ஆளுங்கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் 13 பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அறியமுடிகிறது.

கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (19) ஜனாதிபதியை சந்தித்த எம்.பிக்கள் இது தொடர்பான கடிதத்தைக் கையளித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பிரதமரின் கீழ் அனைத்துக் கட்சி அமைச்சரவையை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.