ஜனாதிபதி வீட்டின் முன் நிகழ்ந்த போராட்டத்தின் பின்னணியில் JVP இருப்பதற்கான சாட்சியங்கள் எம்மிடம் உள்ளன: பிரசன்ன ரணதுங்க
நுகேகொட மிரிஹானவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவர் இருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 தேர்தலில் தேசிய பட்டியலிலிருந்து ஜே.வி.பி.யால் முன்மொழியப்பட்ட வேட்பாளரொருவர், இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட படம் அரசாங்கத்திடம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்த போதிலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதற்கு குறைந்தபட்ச பலத்தை பிரயோகித்ததாகவும், அதாவது பின்னிரவு ஒரு மணியளவில் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாகவும் அவர் கூறினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Post a Comment