Header Ads



எங்கள் நாட்டின் மக்களை, பாதுகாக்கவேண்டிய பாரிய அவசர நிலையுள்ளது - மகேல


பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் சிலர் பதவி விலகவேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மகேல ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் சிலர் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டனர்  அவர்கள் பதவி விலகவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகள் அனைத்தும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை சரியான தகுதிவாய்ந்த நபர்களால் அவற்றிற்கு தீர்வை காணலாம் என அவர் நாட்டிற்கு நம்பிக்கையை வழங்குவதற்கு சிறந்த அணி தேவை என தெரிவித்துள்ளார்.

வீணாக்குவதற்கு நேரமில்லை ,இது பணிவுடன் செயற்படுவதற்கான தருணம் சாக்குபோக்கு தெரிவிக்காமல்  சரியானதை செய்வதற்கான தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அவசரகாலநிலையையும் ஊரடங்கையும் பார்த்து கவலையடைகின்றேன் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு உரிமையுள்ள மக்களின் தேவைகளை அரசாங்கத்தினால் புறக்கணிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை தடுத்துவைப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது தடுத்துவைக்கப்பட்டவர்களிற்காக விரைந்த சட்டத்தரணிகள் குறித்து நான் பெருமிதம் கொள்கின்றேன்,எங்கள் நாட்டின் மக்களை பாதுகாக்கவேண்டிய பாரிய அவசர நிலையுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்

1 comment:

Powered by Blogger.