Header Ads



அரசாங்கத்தை கவிழுங்கள், நாட்டை கவிழ்க்காதீர்கள் - அமைச்சர் டலஸ்


அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக இருந்தால் அரசாங்கத்தை கவிழுங்கள் எனவும் நாட்டை கவிழ்க்காதீர்கள் எனவும் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களின் ஊடகப் பொறுப்பாளர்களுக்குமிடையிலான சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.

எழுபத்து நான்கு வருடங்களாக பாதுகாக்கப்பட்ட ஜனநாயகத்தை காப்பது அனைவரினதும் பொறுப்பு என்று தெரிவித்த அவர், மிரிஹானயில் ஜனாதிபதி இல்லத்துக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற வன்முறைகளை மன்னிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தானும் ஏற்றுக்கொள்வதாகவும், மக்களின் எதிர்ப்பில் நியாயம் இருப்பதாகவும் கூறினார்.

இதேவேளை, சமூக வலைத்தளங்களை தடை செய்வது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அழகப்பெரும, இது அரசியல் ரீதியில் தேவையற்ற தீர்மானம் என தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களை தடை செய்யும் முடிவுக்கு தான் எதிரானவர் என்று கூறிய அவர், இது நவீன தொழில்நுட்பம் தெரியாத ஒரு பிரிவினரால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் கூறினார்.

1 comment:

  1. You try to escape. You have to resign with all others

    ReplyDelete

Powered by Blogger.