Header Ads



ஜனாதிபதி செயலகம் முன் இரவு நேரத்தில் சில காட்சிகள்


காலி முகத் திடலுக்கு அருகாமையில் தொடர்ந்து நடைபெறும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் இன்றைய (25) இரவு நேர காட்சிகளே இவை.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் கூடிய நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் சவப் பெட்டியை எரிமூட்டினார்கள்.

கோட்டாகோகம-வில் இடம்பெற்று வரும் போராட்டத்தில் ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சமிந்த லக்‌ஷான் நினைவு கூரப்பட்டுள்ளார்.

அத்துடன் வழமை போன்றே ஜனாதிபதிகக்கு எதிராகவும், ஆளும் அரசாங்கத்திற்கு எதிராகவும் கோசங்கள் எழுப்பப்பட்டன.

No comments

Powered by Blogger.